வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தினூடாக உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது‐ஜெனரல் உபய மெதவல..!
வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணத் தொகை காவற்துறையினரால் மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டு, பின்னர், அவை உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். தாம் தங்க ஆபரணங்களை புதைத்து வைத்துள்ளதாக மக்கள் காவற்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆபரணங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளர். அதேவேளை 58வது படைப் பிரிவினர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தே 100 கிலோ கிராம் தங்க ஆபரணங்களை மீட்கப்பட்டதாகவும் அவை அரசுடமையாக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமது உடமைகளை கைவிட்டு, இடம்பெயர்ந்த மக்கள் தம்வசம், தங்க ஆபரணங்களையும் ஒரு சில உடமைகளையும் கொண்டு சென்றனர். போர் உக்கிரமடைந்த நிலையில், மக்கள் தாம் கொண்டு சென்ற தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை இருந்த இடங்களில் புதைத்து விட்டு, அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்றனர். இவ்வாறு மக்களால் புதைக்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் படையினரால் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. அதில் ஒரு தொகுதியான 105 கிலோ கிராம் தங்க ஆபரணங்களே அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating