ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்..!

Read Time:2 Minute, 39 Second

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனால், சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன. இந்தப் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளை கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது. வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல், எல்லா நாயகிகளுமே இவருடன் ஒரு முறை நடித்துவிட வேண்டும் என்று துடிப்பது, ரஜினியுடன் மட்டுமே! அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் வித்யா பாலன். தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், இதுவரை அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். படத்தில் முதலில் நாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். இப்போது, இன்னொரு நாயகியாக வித்யா பாலனும் நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க எனக்கும் ஆசைதான். தமிழ் நான் நடிக்கும் முதல் படம் ரஜினியுடன் அமைந்தால், அதைவிட அதிர்ஷ்டம் எதுவுமில்லை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனது பெற்றோரும், நான் ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் எனக்கு முறையான அழைப்பு வரவில்லை, என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவப் படையணிகள் தமிழ் மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து வழங்கியுள்ளனர்‐திவயின..!
Next post இருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது-கெஹெலிய ரம்புக்வெல..!