ஓட்டலில் மர்ம குரல் : ஜெனிலியா ஓட்டம்..!

Read Time:1 Minute, 44 Second

ஆஸ்திரேலியாவுக்கு இந்தி பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார் ஜெனிலியா. ஓட்டலில் மர்ம குரலை கேட்டவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்த அனுபவம் பற்றி கூறியது: சமீபத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற¤ருந்தேன். நட்சத்திர ஓட்டலில் எனக்கு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றதும் ஏதோ ஒரு மர்ம இடத்துக்குள் நுழைந்தது போல் உணர்ந்தேன். சுவர் முழுவதும் பயங்கரமான உருவங்கள் வரையப்பட்டிருந்தன. சமாளித்துக்கொண்டு தங்கினேன். நேரம் செல்லச் செல்ல ஏதோ ஒரு மர்ம குரல் கேட்கத் தொடங்கியது. யாரோ வெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த குரல் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்ததால் கூர்ந்து கவனித்தேன். சுவரில் விரிசல் விடுவதுபோல் சத்தம். உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட தங்க விரும்பாமல், வெளியில் ஓடி வந்தேன். வெளியில் வந்த பிறகுதான் உடன் வந்தவர்களும் அதேபோல் சத்தம் கேட்டு அறையிலிருந்து ஓடிவந்திருப்பது தெரிந்தது. அதன் பின் வேறு ஓட்டலில் சென்று தங்கினோம். இது திகில் அனுபவமாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விற்பனைக்கு வருகிறது கூகுளின் ‘குரோம் நெட்புக்’..!
Next post உத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்..!