இலங்கையில் மீளவும் பன்றிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயம்..!
இலங்கையில் மீளவும் பன்றிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட 15 பேர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான தடுப்பு ஊசிகள் நாட்டின் சகல அரச வைத்தியசாலைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னரும் இலங்கையில் பன்றிக் காய்ச்சல் அபாயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொண்டை வலி, கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் காணப்பட்டால் வைத்தியரை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் சிறுவர்களையும், ஏனைய நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களையும், முதியவர்களையும் அதிகமாக தாக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating