வீதியோர விளக்குகளில் சி.எப்.எல் மின்குமிழ்கள் பொருத்தும் திட்டம்..!
Read Time:1 Minute, 3 Second
வீதியோர விளக்குகளில் உள்ள மின்குமிழ்களை மாற்றி சி.எப்.எல் மின்குமிழ் பொருத்தப்படும் என இலங்கை மின்சாரசபை தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘பொதுமக்களுக்கு பயன்தரத்தக்க வகையில் புதிய வகை மின்குமிழ்கள் பொருத்தப்படும். முன்னர் பாவனையில் இருந்த விளக்குகளால் மின்சாரசபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை நிவர்த்தி செய்யும்முகமாக புதிய வகை மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் அதிகளவு மக்கள் செறிந்து வாழக்கூடிய கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களில் வீதியோர விளக்குகளில் மின்குமிழ்கள் மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
Average Rating