கொழும்பில் மனைவியை மீட்டுத் தருமாறு மரத்தில் ஏறி அடம்பிடிக்கும் கணவன்..

Read Time:1 Minute, 42 Second

ஜோர்தானில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவருமாறு கோரி நபரொருவர் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். கொழும்பு ஹவலொக், கவர் வீதியிலுள்ள மரம் ஒன்றில் ஏறியே குறித்த நபர் தனது கோரிக்கையினை முன்வைத்துள்ளார். தனது மனைவி ஜோர்தானுக்கு பணிப்பெண்ணாகச் சென்று பல மாதங்களாகியும் அவருக்கு வேலை செய்யும் வீட்டில் சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனை இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் அறிவித்திருந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 11.45 மணியிலிருந்து தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரிக்கைவிடுத்து, மரத்தில் ஏறி நின்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நுகேதன்ன, துன்மோர்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு மரத்தில் ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை பொலிஸார் சமாதானப்படுத்தி மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரில் இருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி புடவையை கவர வந்த கயவர்!
Next post மீண்டும் நாக பாம்புடன் இணைந்தார் கொள்ளுப்பிட்டி கேளிக்கை விடுதி நடனப் பெண்!