வவுனியா குளத்தில் நீராடிய 16வயது மாணவன் பலி
Read Time:1 Minute, 6 Second
வவுனியாவிலுள்ள குளமொன்றில் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த மாணவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி கற்கும் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பிரபாகரன் சஜீபன் (வயது16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள வவுனியா கரையானகுளத்தில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating