கனடிய புலிகளின் “உலகத்தமிழர் இயக்கத்தின்” மீதான தடை மேலும் இரண்டு வருடங்களிற்கு நீடிப்பு
Read Time:1 Minute, 17 Second
கடந்த 2008ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி கனடிய அரசால் தடை செய்யப்பட்ட புலிகளின் “உலகத்தமிழர் இயக்கத்தின்” மீதான தடை இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு வந்தது. இதன் பிரகாரம் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஆராயப்பட்ட இத் தடை மேலும் இரண்டு வருடங்களிற்கு நீடிக்கப்பட்டு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி மீண்டும் கனடாவின் பாதுகாப்பு உயர் பீடத்தால் மீளாய்வுக்கு எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தடையுத்தரவு குறிப்பிட்ட திகதிக்கு முன்னரயே நவம்பர் 20ம் திகதி பரிசீலிக்கப்பட்டு இத்தடை விவகாரம் மீண்டும் மீளாய்வுக்கான திகதி குறிப்பிடப்படாமல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இது இத் தடையுத்தரவு மீண்டும் 2014ல் மீளாய்வுக்கு வராமலே தடையுத்தரவு தொடரும் சாத்தியத்தைத் தெரிவித்துள்ளது.
Average Rating