யாழில் ஆமை இறைச்சிக்கு ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி!
Read Time:49 Second
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் இறைச்சிக்காக கடல் ஆமைகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை யாழ். முகாம் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இறைச்சிக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கிராம் எடையுடைய கடல் ஆமைகள் இரண்டு அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Average Rating