அமைச்சர் மேர்வினை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
Read Time:1 Minute, 18 Second
மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். மஹர நீதிமன்றத்தில் இன்றுக்காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போதே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்’ ‘பிரதான சந்தேக நபர் சுதந்திரமாக இருக்கின்றார்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள் இருவர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Average Rating