ஹசித மடவல கொலை சந்தேகநபர்கள் ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் சஹன் மாபா இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
கொலையுடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர்கள் இருப்பார்களாயின் அவர்களையும் கைது செய்யும்படி உத்தரவிடுமாறு ஹசித மடவல சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என அவர் கோரிக்கை முன்வைத்தார்.
அதன்படி, பிரதான கொலை சந்தேகநபரான சுஜீவ ரங்கன உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களான சத்துரங்க வீரசேகர, விதானபத்திரனகே சமன், ஹேமந்த குமார பெரேரா மற்றும் சிங்கப்பூர் சரத் எனப்படும் சரத் எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating