ரிசானாவுக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு!
Read Time:53 Second
சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று (17) ரிசானாவின் மூதூர் வீட்டுக்குச் சென்று 5 லட்சம் ரூபாவை குடும்பத்தாரிடம் வழங்கியதாக தெரிவிக்கின்றார். சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ரிசானாவின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபா நிதியை வழங்கினார். ரிசானாவின் குடும்ப நிலையை உயர்த்தவென இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Average Rating