இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு: சந்தேகநபர் தப்பியோட்டம்
Read Time:1 Minute, 22 Second
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போர்ட் தோட்டத்தில் இளம் பெண் தொழிலாளி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரினாலேயே பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் குறித்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். கருவை அழிக்க குறித்த பெண் முற்பட்டவேளை, அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டமை தெரிய வந்துள்ளது. அதனையடுத்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய வெளிக்கள உத்தியோகத்தர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating