மட்டக்களப்பில் தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டனர்!

Read Time:1 Minute, 25 Second

batticola-003
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்புப் பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில் வாகனமொன்று வீழ்ந்துள்ளது. இருப்பினும் அவ்வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும் காப்பற்றப்பட்டுள்ளனர். அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் திருமண வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்களின் டொல்பின் ரக வாகனமே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்வாகனத்தில் பயணித்த 20 பேரும் உயிர் ஆபத்தின்றி வெல்லாவெளிப் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எவரும் பாரதூரமாக காயமடையவில்லையெனவும் வெல்லாவெளி பொலிஸார் கூறினர். எனினும் ஆற்றில் விழுந்த வாகனத்தை மீட்கமுடியவில்லையெனவும் பொலிஸார் கூறினர். இவ்விபத்துத் தொடர்பான விசாரணையை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸில் 19வருடங்களுக்கு முன் கொலை ஒன்றை செய்த தமிழருக்கு இன்று தீர்ப்பு!
Next post இன்றைய ராசிபலன்கள்: 25.01.2013