(VIDEO) பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற அடி, தடி சண்டை
லெபனான் நாட்டில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இருவர் மோதிக் கொண்டனர். அல் மனார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிரியா நாட்டு பிரச்னை குறித்த விவாதத்தில் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளரும் மூத்த பத்திரிகையாளருமான சலீம் ஜஹ்ராணியும் அசாத் எதிர்ப்பாளரான பஸாராவும் கலந்து கொண்டனர். நேரலை நிகழ்ச்சியான அதில் தொடக்கம் முதலே இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். குறிப்பாக அசாத் எதிர்ப்பாளரை பத்திரிகையாளர் ஜஹ்ராணி முட்டாள் என திட்டினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற பத்திரிகையாளர் ஜஹ்ராணி, தமது முன்பாக இருந்த தண்ணீரை எடுத்து அசாத் எதிர்ப்பாளரின் மீது ஊற்றினார். இதைப் பார்த்த லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள், பத்திரிகையாளரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் நேரலை விவாத நிகழ்ச்சியில் விளம்பரம் போடப்பட்டது. பின்னர் விவாதம் தொடங்கியதும் விருந்தினர்கள் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
Average Rating