கலிகாலம்: மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்
Read Time:1 Minute, 16 Second
திருகோணமலை, கோமரன்கடுவெல பிரதேசத்தில் 10 வயது சிறுவனால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மூன்றரை வயது சிறுமி ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோமரன்கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி நேற்று (17) மாலை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுவனால் இவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறுவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோமரன்கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating