கள்ளு கடை திறக்க கோரி அஸ்வமேத யாகம்!

Read Time:1 Minute, 47 Second

911416792imagesகள்ளுக் கடையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அஸ்வமேத யாகத்தை யாரும் தடுக்காததால், கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கள்ளுக் கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், அஸ்வமேத யாகம் சென்னையில் நேற்று நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே துவங்கி, தெற்கு கூவம் சாலையில் யாகம் முடிந்தது. குதிரை போல் வேடமணிந்தவரை, இப்பாதையில் அழைத்துச் சென்றனர்.

“கள்ளுக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, குதிரையை நிறுத்துபவர்கள், அதற்கான காரணங்களை கூறி வெற்றி பெற்றால், கள்ளுக்கடை திறப்பு கோரிக்கையை கைவிடுவோம்´ என, கள் இயக்கம் அறிவித்திருந்தது. ஆனால், குதிரையை யாரும் தடுத்து நிறுத்தி, வாதத்துக்கு முன் வரவில்லை.

இதையடுத்து, ´கள்ளுக் கடை திறக்கும் கோரிக்கை நியாயமானது என்பது உறுதியாகியுள்ளது. மழை பெய்து, வறட்சி நீங்கும் காலத்தில், கள் இறக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்´ என, நல்லசாமி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க கட்டாயப்படுத்தி அமெரிக்க பள்ளி! அதிர்ச்சியில் தாயார்
Next post (வீடியோவில்) இன்று சிரித்து மகிழுங்களேன்… நகைச்சுவை கலியாணக் காட்சிகள்!