கொழும்பு, ஆனந்தா, நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்
Read Time:57 Second
கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் கண்ணீர்ப்புகை பிரயோகம் பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதியின்மையை ஏற்படுத்தும் வiயில் நடந்து கொண்டதால் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். ஆனந்தா மற்றும் நாலந்தா பாடசாலைகளின் பழைய மாணவர்களே மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating