ஆசிரியையை பழிதீர்க்க அவரை பலாத்காரம் செய்த மாணவன்!

Read Time:1 Minute, 50 Second

rape-01இந்தியாவில், தன்னை தண்டித்த ட்யூஷன் ஆசிரியையை, அவர் தனியாக இருந்த நேரத்தில் திட்டமிட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் ப்ளஸ் டூ மாணவன் ஒருவர். குறித்த ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் கவிநகர் பகுதியில் வசிக்கும் பி.காம் பட்டதாரியான இளம்பெண் ஒருவர், பகுதி நேர வேலையாக மேல்நிலைப் பாடசாலை மாணவ – மாணவிகளுக்கு கணக்குப்பதிவியல் டியூஷன் கற்றுக் கொடுத்து வருகிறார்.

இவரிடம் படிக்கும் பிளஸ் டூ மாணவன் ஒருவனின் நடத்தைகள் பிடிக்காததால் அவனை டியூஷனுக்கு வரவேண்டாம் என்று அந்த பெண் கடுமையாகக் கூறிவிட்டார்.

நேற்று காலை, அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்துக்கொண்ட அந்த 18 வயது மாணவன், வீட்டிற்குள் நுழைந்து அவரை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் கவிநகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை உறுதியானதையடுத்து அந்த மாணவனை பொலிசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் அந்தரங்கத்தை சொல்லும் அங்க இலட்சணம்!
Next post (வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..