பொது பலசேனாவின் காலி மாவட்ட தலைமையகம் கோத்தபாயவினால் திறப்பு

Read Time:1 Minute, 39 Second

pikku.bothubalasenaகாலியில் நிறுவப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைத்துவ நிறுவகத்தை எதிர்வரும் சனிக்கிழமை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைக்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான செயற்பாட்டிற்கு மேற்படி தலைமையகம் பேருதவியாக இருக்கும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தஞான சார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா குறுகிய காலத்தில் தேசியளவில் சிறந்த வலையமைப்பை உருவாக்கி நாட்டில் ஊடுருவி ஏனைய மதங்களின் உரிமைகளை அழித்துக்கொண்டிருக்கும் அடிப்படைவாத சக்திகளை அழித்து பௌத்த மதத்தை பாதுகாப்பதுடன் ஏனைய மதங்களின் உரிமைகளையூம் உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் காலியில் தலைமையலுவலகத்தை பொதுபலசேனா எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கவூள்ளது. இதற்கு தலைமை தாங்க பாதுகாப்புச் செயலாளர் செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிப‌லனகள்:06.03.2013
Next post துமிந்த சில்வா விளக்கமறியலில்