குடும்ப பிரச்சினை காரணமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை
Read Time:1 Minute, 6 Second
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவூ 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில், கறுவப்பங்கேணி பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கறுவப்பங்கேணியை சேர்ந்த 31யவதான வெ.ஜேசு என்பவரே ரயிலின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மோதுண்ட ரயிலில் சென்ற அதிகாரிகளினால் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating