பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை
Read Time:1 Minute, 18 Second
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை செய்து புதைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவூணதீவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தவறான உறவினால் இந்த சிசு உருவாகிய நிலையில் நேற்றிரவூ சிசு பிறந்தபோது அதனை கொன்று மண்ணில் புதைத்துள்ளார். இதுபற்றி வவூணதீவூ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சிசுவின் தாயாரை கைது செய்துள்ளதுடன் சிசுவின் சடலத்தையூம் மீட்டுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் இவ்வாறான ஏழு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating