ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு நெஞ்சு வலி: பயணிகளை பத்திரமாகக் காத்து உயிர் துறந்தார்!!

Read Time:1 Minute, 5 Second

news-009ஆத்தூரில் இருந்து ஈரோட்டிற்கு இன்று மாலை ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. பஸ்சை உமாசங்கர் ஓட்டிச் சென்றார். பஸ் ஆத்தூரில் இருந்து சிறிது தூரம் சென்றதும், டிரைவர் உமா சங்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இருப்பினும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பிரேக் போட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். கண்டக்டர் மற்றும் பயணிகள் அவசரமாக வந்து உதவி செய்வதற்குள் உமாசங்கர் இறந்துவிட்டார். மாரடைப்பு ஏற்பட்டதும் பஸ்சை உடனே நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த பயணிகள், உயிர் போகும் நிலையிலும் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் அவர் தன் கடமையை செய்ததாக உருக்கத்துடன் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுரேஷ் ரெய்னா – அனுஷ்கா சர்மா காதல் கதை!
Next post மெக்ஸிக்கோவில் மாநில அமைச்சர் சுட்டுக் கொலை