வாகன விபத்தில் இருவர் பலி
Read Time:1 Minute, 21 Second
ஹம்பாந்தோட்டை, மயுரபுர சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஹம்பாந்தோட்டை நோக்கி வருகை தந்து கொண்டிருந்தபோது, ஹம்பாந்தோட்டையிலிருந்து திஸ்ஸமகாராமை நோக்கி சென்று கொண்;டிருந்த வேனுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி பாதை அருகே உள்ள வாவியில் விழுந்து காணப்படடது. முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரில் இருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவர் காயமடைந்துள்ளனர். வெலிமடை, பொரகஹயைச் சேர்ந்த 25 வயதான எல்.என்.புpரசன்ன மற்றும் 28 வயதான கே.டபில்யூ.எஸ்.ஐ. ஜயவீர ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating