யாழில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு
ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காகச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை மாலை யாழ் தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகில் வசித்த மாணிக்கம் செல்வராணி (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். குழை வெட்டச் செல்வதாகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அங்கு அவர், ஆட்கள் நடமாட்டமற்ற பகுதியில் உள்ள பற்றைக்கு அருகாமையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். எனினும் , அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முன்னரே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட்டவில்லை. சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டுள்ளார்கள்.
Average Rating