மூன்றுநாள் சிசுவை விற்பனை செய்த தாய் தந்தை உள்ளிட்ட மூவர் கைது
Read Time:1 Minute, 2 Second
பிறந்து மூன்று நாளேயான சிசுவை 35,000 ரூபாவிற்கு விற்பனைசெய்த விடயமாக மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் புசல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிசுவின் தாய், தந்தை, சிசுவை கொள்வனவு செய்த பெண் மற்றும் இடைத்தரகர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். லபுக்கலயைச் சேர்ந்த தாய், புசல்லாவ வ{ஹகபிட்டி வைத்தியசாலையில் கடந்த 15ம் திகதி குழந்தை பெற்றெடுத்துள்ளார். சிசு பிறந்து மூன்று நாட்களில் தரகர் ஒருவர் மூலம் சிசு நயினாமடு பகுதியில் உள்ள 53 வயதுடைய பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Average Rating