வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம்

Read Time:1 Minute, 30 Second

Vavuniya_Districtமக்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் சமூக பொருளாதார இலக்குகளையும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று இந்த குழுவினை ஆரம்பித்துள்ளனர். இதில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை செபமாலை அடிககளாரும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் தலைவர் ரவிகரனும், சிறப்புப் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு இன்றைய காலகட்டதடதில் வவுனியா மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் தேவை மற்றும் அவசியம் பற்றியும் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் இறுதி அம்சமாக பிரஜைகள் குழுவின் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி உட்பட காப்பாளர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகச் செயலாளர், மாவட்ட இணைப்பாளர் மற்றும் இவர்களுடன் மூன்று பிரதேச செயலர் பிரிவிற்குமான அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு, கொட்டாவையில் மதமாற்றம் செய்வது தொடர்பில் கிறிஸ்தவ சபை மீது தாக்குதல்
Next post ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அடுத்த படத்தினை ஆரம்பித்துள்ளார்..