தாவடி முருகன்கோயில் விக்கிரகங்கள் மீட்பு, சந்தேகநபர் கைது

Read Time:1 Minute, 46 Second

arrest-slk.polceயாழ். தாவடி முருகன் கோவிலில் களவாடப்பட்ட முருகன், வள்ளி, தெய்வாணை ஆகிய ஐம்பொன்னிலான மிகவும் பெறுமதிமிக்க விக்கிரகங்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன் இரவு இவ்விக்கிரகங்கள் திருடப்பட்டது. இரவு 2மணியளவில் விக்கிரகங்களைத் திருடி அவற்றைத் துணியொன்றினால் மூடித்தோளில் வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகன வெளிச்சத்தில் தனது முகத்தை மறைப்பதற்காக அத்துணியால் முகத்தை மூடியவேளை விக்கிரகங்கள் வெளியே தெரிந்ததாகவும் இதனையடுத்துத் திருடன் அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருடன் சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாவடி தெற்கு கொக்குவில் அம்பலவாணர் கந்தசாமி கோவிலில் திருடப்பபட்ட முருகன் சமித வள்ளி தெய்வானை சுவாமிகளின் விக்கிரகங்கள் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையிலான பொலிஸ் அணியினரின் தீவிர தேடுதல் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அடுத்த படத்தினை ஆரம்பித்துள்ளார்..
Next post இன்றைய ராசிபலன்கள்: 25.03.2013