சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதி தூக்கிட்டு தற்கொலை
Read Time:1 Minute, 0 Second
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் யுவதியொருவர் நேற்று இரவு அவரது விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மீகலயாவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த காஞ்சனா நயனமாலி என்ற 20 வயதுடைய யுவதியே மேற்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் பெல்ஜியம் நாட்டுக்கு சொந்தமான சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்தில் தற்கொலை செய்துகொண்ட யுவதி தொழில் புரிந்து வந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating