ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 30பேர் பலி
இந்தியாவின் மும்பை நகரில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 7 மாடி கட்டடம் இன்று இடிந்து விழுந்தில் 30 பேர் பலியானதுடன் 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தின் போது உயிரிழந்தவர்கள் பலர் அங்கு தங்கி வேலை பார்க்கும் ஊழியர்களாவர். காயமுற்றோர் பலர் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் இடிபாடுகளுக்கு மத்தியில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகவும் இதனால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது. மும்பையின் தானே ஷில்பாத்தா எனுமிடத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 4 மாடி கட்டடம் கொண்ட இந்த பகுதியில் மேலதிகமாக 3 மாடிகள் கட்டுவதற்கு சட்டவிரோதமாக கட்ட முயற்சித்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் கட்டட உரிமையாளர்மீது கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர். இக்கட்டடத்தில் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். கட்டடம் இடிந்து வீழ்ந்தில் வீட்டில் இருந்தவர்களும் அங்கு தங்கி வேலை பார்த்த கட்டிட உழியர்களுமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
Average Rating