சிலாபத்தில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

Read Time:1 Minute, 42 Second

Ani.Love.Kissபுத்தளம் மாவட்டம் சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டி அறிந்துள்ளனர் என அவ் இளைஞன் பொலிஸாருக்கு கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியை கடத்தி நொச்சியாகம பிரதேசத்திற்குச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாதம்பே பிரதேசத்தில் உள்ள சட்டத்தரணி ஒருவர் முன் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்ட பின்னரே தான் இந்த சிறுமியுடன் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருவதாக கைது செய்யப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார். தாங்கள் தற்போது பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை எனவும், சிறுமி திருமண வயதை அடைந்ததன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக தாங்கள் இருவரும் தீர்மானித்துள்ளதாக அவ் இளைஞன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திருமண வயதை அடையாத சிறுமி ஒருவருடன் கணவன் – மனைவியாக வாழ்வது சட்டவிரோதமானது என கூறிய மாதும்பே பொலிஸார் அவ் இளைஞனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையில் பஸ்ஸில் இளைஞன் அட்டகாசம்
Next post புல்மோட்டையில் கணவன் மனைவி வெட்டிப் படுகொலை