கதிரவெளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்
Read Time:1 Minute, 22 Second
மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். வாகரையில் இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்துவிட்டு இவர்கள் வெருகல் விநாயகபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் மூவர் வேகமாகச் சென்ற வேளையில் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் பலமுறை தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த மூவரில் படுகாயமடைந்தவர் உடனடியாக ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியபோதும் அவர் சிகிச்சை பயனின்றி இன்றுஅதிகாலை மரணமடைந்துள்ளார். விநாயகபுரத்தைச் சேர்ந்த 27 வயதான செல்வநாயகம் குகன் என்பவரே பலியாகியுள்ளார்.
Average Rating