ரீமா கல்லிங்கல் விவகாரம்! தயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த மலையாள நடிகர் சங்கம்!!
Read Time:1 Minute, 16 Second
ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதற்காக நடிகை ரீமா கல்லிங்கல் மலையாள படங்களில் நடிக்க அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இதனால் அவர் நடித்து வந்த சாசரியுடு கர்ப்பிணிகள் என்ற படம் இழுபறியில் நின்றது. இதன்காரணமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு விளக்க கடிதம் கொடுத்தார் ரீமா. என்றபோதும் ரீமா மீது விதித்திருந்த தடை நீக்கப்படவில்லை.
இதையடுத்து மலையாள நடிகர் சங்கம் ரீமா கல்லிங்கலுக்கு ஆதரவாக களமிறங்கியது. அவர் மீதான தடையை நீக்காவிட்டால், தயாரிப்பாளர் சங்கம் நடத்தவிருக்கும் விருது விழாவில் நடிகர்கள் யாரும கலந்து கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பிரச்னை பெரிய அளவில் வெடிக்கப்போவதை உணர்ந்த மலையாள தயாரிப்பளர் சங்கம், ரீமா கல்லிங்கள் மீதான தடையை நீக்கியுள்ளது.
Average Rating