தலைவர் பதவிலிருந்து விலகுகிறார் முஷ்பிகுர்!!
பங்களதேஷ் அணியின் தலைவர் பதவிலிருந்து விலகவுள்ளதாக அவ்வணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார். சிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களதேஷ் அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற ரீதியில் சமப்படுத்தியதுடன் ஒரு நாள் தொடரை 2-1 என்ற ரீதியில் ,ழந்துள்ள நிலையிலேயே முஷ்பிகுர் ரஹீம் ,வ்வாறு தெரிவித்துள்ளார்.
,து தொடர்பில் முஷ்பிகுர் ரஹீம் கூறுகையில், சிம்பாப்வே அணியுடன் ,வ்வாரம் நடைபெறவுள்ள 20-20 தொடருடன் நான் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளேன். சிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடர் தோல்வியும், என்னால் சிறந்த முறையில் அணித்தலைவராக செயற்படமுடியாமல் போனதுடன் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தாமையுமே எனது பதவி விலகலுக்கு காரணம் என்றார்.
தற்போது 24 வயதாகும் முஷ்பிகுர் ரஹீம் கடந்த 2011ஆம் ஆண்டில் சகிப் அல்-ஹசனைத் தொடர்ந்து பங்களதேஷின் அணித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றார்.
Average Rating