10 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞன்!!
Read Time:1 Minute, 22 Second
பொகவந்தலாவை, மொடக்கு சீனாகுள தோட்டத்தில் 10 வயதுச் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மேலதிக சிகிச்சைகளுக்காக சிறுவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் ஜயசூரிய தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரை நாளை (27) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating