ஆறு பேரால் கூட்டாக சிறுமி கற்பழிப்பு!!
Read Time:1 Minute, 2 Second
அக்குரஸ்ஸவில் 14 வயது சிறுமி ஆறு பேரால் கூட்டாக கற்பழிக்கப்பட்டமை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஏனைய மூவரையும் கைது செய்கின்றமைக்கு பொலிஸார் மேலதிக புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
குற்றச் செயல் கடந்த 26 ஆம் திகதி மாலை 3. 30 மணிக்கு இடம்பெற்று உள்ளது.
வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சாமான் வாங்க வந்த சிறுமியை மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகியவற்றில் வந்த நபர்கள் கடத்தி சென்று பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து கெடுத்தனர்.
இச்சிறுமி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Average Rating