மியானமர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆங் சாங் சூகி விருப்பம்!!
2015-ம் ஆண்டு மியன்மாரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக ஆன் சான் சூ கியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சூகி தெரிவித்துள்ளார். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டவராகவோ அல்லது ஒருவரின் குழந்தைகள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருந்தாலோ அதிபராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங் சான் சூ கி இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டவர் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் சூகி கலந்து கொண்டார். அப்போது இது குறித்து அவர் கூறுகையில், ‘ நான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிபர் ஆக விரும்பவில்லை என்று பாசாங்கு செய்தால், அது உண்மையாக இருக்காது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் சூகி கேட்டுக்கொண்டுள்ளார்.
Average Rating