ராம் கோபால் வர்மாவுக்காக லிப்டிலும் இருந்து தோன்றிய ஒரு தேவதை !!

Read Time:2 Minute, 8 Second

15-nathalia-1-300அழகைத் தேடித் பிடிப்பதும் ஒரு கலைதான். அந்தக் கலையில் கை தேர்ந்தவர் ராம் கோபால் வர்மா என்றால் மிகை ஆகாது. அவரது நாயகிகள் தூணிலும் இருப்பர். துரும்பிலும் இருப்பர். இப்போது லிப்டிலும் இருந்து தோன்றிய ஒரு தேவதையை பற்றிய சேதி இது.

அந்தக் கதையை அழகு தேவதை அனைகா கூற கேட்போம். ‘இந்தியாவில் பிறந்தாலும், ஹாங் காங்கில், ஒரு பிரபல கட்டிடக் கலை அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது, என் தோழியுடன் மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தின் லிப்டில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை சந்திக்க நேர்ந்தது. என் தோழி அவர் தான் ராம்கோபால் வர்மா என அறிமுகப்படுத்திய போது கூட, எனக்கு அவரைத் தெரியவில்லை. பின்னர் என் தோழி மூலம் அவர் படத்தில் என்னைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும், முதலில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக் கொண்டேன்.

அந்த முடிவுக்கு அவரது கதையும், அவருடைய மேக்கிங் ஸ்டைலும் முக்கிய காரணம். ஆனால் லிப்ட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, என்னால் நம்பவே முடியவில்லை.

‘இரு மொழிகளில் தயாராகும் ‘நான்தாண்டா’ திரைப்படம் என்னை நிச்சயம் பிரபலமாக்கும் என்கிறார் அனைகா. அவரது பெயரின் அர்த்தம் கேட்ட போது ‘பலம் வாய்ந்தவள், நிறைவானவள்’ என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லேடி காகாவின் விரல் நகத்துக்காக $13,000 கொடுத்த ரசிகன் !!(VIDEO)
Next post கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்!!