பௌத்த பிக்குவுடனிருந்த இளைஞனும் இரு பெண்களும் கைது
புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டை முற்றுகையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கம்பஹா பிரதேச விகாரையைச் சேர்ந்த 71 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் வென்னப்புவ, லுணுவில பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞரொருவரும், வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தான் இதற்கு முன்னரும் இந்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பௌத்த பிக்கு, அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை எனவும், கைது செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த வீடு தவறான நடவடிக்கைகளுக்காக வாடகைக்கு வழங்கப்படுவதெனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating