ஆட்சி அதிகாரங்களை மகனிடம் ஒப்படைத்தார் கட்டார் மன்னர்!!
Read Time:1 Minute, 17 Second
கட்டார் மன்னர் ஷேக் ஹமாட் பின் கலிபா அல்தானி தமது அதிகாரங்களை புதல்வரிடம் கையளித்துள்ளார். இளைய தலைமுறையினர் அதிகாரங்களை பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் கட்டார் மன்னர் தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றில் கருத்து வெளியிட்ட கட்டார் மன்னர், இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன் பிரகாரம், ஷேக் தமிம் பின் ஹமாட் அல்தானியிடம் கட்டாரின் அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த 150 வருடங்களுக்கும் அதிகமாக கட்டாரில் அல்தானியின் குடும்பத்தினரே மன்னராக பதவி வகித்துவருகின்றனர். தமிம் பின் ஹமாட் அல்தானி கட்டார் இராணுவத்தில் முக்கிய உயர்மட்ட பதவியில் உள்ளவர்.
மத்திய கிழக்கில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், புதியவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Average Rating