சிறுவனை சித்திரவதை செய்த தாயின் கள்ளக் காதலனுக்கு சிறை!!
10வயது சிறுவன் மீது மிளகாய்தூளைத் தூவி, சுத்தியலால் தாக்கி, மிக மோசமான வகையில் தீயினால்சுட்டு சித்திரவதை செய்த தனது தாயின் கள்ளக்காதலனுக்கு பத்துவருட கடூழியச்சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் கேகல்ல மேல் நீதிமன்ற நீதிவான் திருமதி மேனகா விஜேசுந்தர விதித்துள்ளார். கித்துல்கல எனும் பிரதேசத்தின் வீடொன்றில் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி குறித்த சிறுவனின் உடலில் மிளகாய்தூளை கொட்டி சுத்தியலாள் தாக்கி தீயினால் சுட்டு கடுமையாக சித்திரவதை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் முறைப்பாட்டையடுத்து கித்துல்கல பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். சிறுவனின் உடலில் தீக்காயங்கள் உட்பட்ட காயங்களுக்கான தழும்புகள் காணப்பட்டதாக வைத்திய அதிகாரி பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்திருந்தார். வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுவன் சாட்சியமளிக்கையில் தான் வயது குறைந்த தன் இரு சகோதரர் மற்றும் தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்த நிலையில் சுகவீனமுற்ற தன் தந்தை இறந்துவிட்ட பின்னர் தனக்கு சித்திரவகைப்புரிந்த சிறியத்தந்தை தங்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். அதேவேளை தனக்கு தினமும் இவ்வாறு சித்திரவதை புரிந்து வந்தையும் கட்டிக்காட்டினார்.
இதனையடுத்து நீதிவான் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய பாதுகாப்பு பராமரிப்பு அற்றதன் காரணமாக சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு தெரிவித்து எதிரிக்கு பத்துவருட சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதேவேளை எதிரி அபராத தொகையைச் செலுத்தாது தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடத்திற்கு கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating