சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது!!

Read Time:1 Minute, 48 Second

australia-flag2மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குள விடுதி ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றவர்கள் எனும் குற்றச்சாட்டில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை நேற்றுஅதிகாலை 12.30 மணிக்கு காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தகவல் அறிந்து கிரான்குள விடுதிக்குச் சென்ற காத்தான்குடிப் பொலிஸார், இரு ஆண் பிள்ளைகளைகளும் ஒரு பெண் பிள்ளையும் அடங்கலாக 5 குடும்ப உறுப்பினர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்ததாகவும் இவர்களை காத்தான்குடிப் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை நடாத்திவருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இப் பிரதேசத்தைச் சேர்ந்த செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 23 பேர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சகோதரனின் மகள்மீது பாலியல் வல்லுறவு!!
Next post பலநாட்களுக்கு பிறகு பளீச்சென்று கண்ணில் சிக்கிய உள்ளூர் மொடல்கள் !!(PHOTOS)