ஒன்றரை வயது குழந்தைமீது பாலியல் துஷ்பிரயோகம்!!
18 மாத பெண் குழந்தையொன்றுக்கு விளையாட்டுக் காட்டியே சைக்கிளில் அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவமொன்று குளியாப்பிட்டி பகுதியிலுள்ள இலுக்ஹேன என்னுமிடத்தில் இடம் பெற்றுள்ளது. 27 வயது டைய ஒரு பிள்ளைக்கு தந்தையான நபரே இவ்வாறு நடந்துள்ளார். பிள்ளையுடன் அன்பாக இவர் பழகியதன் காரணமாக குழந்தையின் பெற்றோர் குழந்தையை அழைத்துச் சென்றபோது எதுவும் கூறவில்லை.
இச் சம்பவம் வெளியே தெரியவரவே இந்நபர் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார். இச்சந்தேக நபர் புத்தளம் பகுதியிலுள்ள மங்களவெளி என்னுமிடத்திலுள்ள மறிச்சுக்கட்டி என்னும் கிராமத்திற்கு வந்து ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் முந்தல் பொலிஸாருக்கு தெரியவரவே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத்மானவ தலைமையில் சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, குளியாப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Average Rating