தமிழர் பகுதிகள் மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு -எழிலன்

Read Time:1 Minute, 35 Second

LTTE.elilan.1.jpgஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவு மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன! இலங்கையின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரத்தில் பேருந்து ஒன்று கண்ணி வெடித் தாக்குதலுக்கு உள்ளாகி 58 பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து தமிழர் பகுதிகளின் மீது இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 2 கீஃபிர் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதாக புலிகளின் தமிழ்நெட் இணையத்தளம் கூறியுள்ளது.

இதே நேரத்தில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்ப்பூர், முதுர் கிழக்கு ஆகிய பகுதிகளை நோக்கி இலங்கை ராணுவத்தினர் பல்குழல் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருவதாக அப்பகுதி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எழிலன் கூறியிருப்பதாகவும் தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் அளிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
Next post இன்றும் நாளையும் நடைபெறும் உலக உதைபந்தாட்டப் போட்டிகள்