ஹெலிகாப்டர் விபத்து: இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் பலி..!!

Read Time:1 Minute, 39 Second

60c93a96-8d30-48dc-940e-cef57ba41aee_S_secvpfரஷியாவின் தூர வடக்கு கோலா வளைகுடா பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் இருவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இறந்த இருவரும் சுற்றுலா பயணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 3-வது நபர் குறித்த அடையாளம் இன்னும் தெரியவில்லை.

விபத்து நடக்கும்போது மூன்று பேரும் ஹெலிகாப்டரில் இல்லை. அந்தப் பகுதிக்கு இவர்கள் மூவரும் மீன்பிடிப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றிருக்கலாம் எனவும், அவர்களை இறக்கிவிட்டபின் மேலெழும்ப முயற்சித்தபோது அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக சாய்ந்து விழுந்ததில் இவர்கள் மூவரும் நசுங்கி இறக்க நேரிட்டிருக்கலாம் என்றும் ரஷ்யாவின் விமான நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.

இறந்துபோன இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாப் பயணிகள் எனவும், வெளிநாட்டினர் கலந்துகொள்ளும் மீன்பிடிக்கும் நிகழ்ச்சிக்காகவே இவர்கள் வந்ததாகவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.மாவட்ட சிறீ ரெலோ அலுவலகம் மீது தாக்குதல்…!!
Next post 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை..!!