திருட வந்தவர் வீட்டில் உறங்கிய சம்பவம்..!!
வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ள கட்டிலொன்றில் நித்திரை கொண்ட திருடனொருவனை மாத்தறை மாவட்டம் திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திக்வெல்ல, சுதுவெல்ல என்ற இடத்தில் கடந்த 22ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு 8.30 மணியளவில் முன் கதவை யாரோ தட்டியதை அடுத்து அவ்வீட்டிலிருந்த தாயும் மகளும் கதவைத் திறந்து பார்த்தபோது முக்காடு போட்ட நபரொருவரைக் கண்டுள்ளனர். பின்னர் அந்த நபர் பின் கதவைத் தட்டியுள்ளார்.
இதனால் அச்சமுற்ற தாயும் மகளும் வீட்டை விட்டு வெளியேறி அயல் வீடொன்றுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த தாய் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்துள்ளார். பின்னர் இரவு 10.30 மணியளவில் கணவருடன் வீடு சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த கட்டிலொன்றில் அந்த நபர் நித்திரையிலிருந்துள்ளார். வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating