அதிர்ஷ்டவசமாக திமிங்கிலங்களிடமிருந்து உயிர் தப்பிய மனிதர்கள் (VIDEO)
Read Time:1 Minute, 9 Second
சுழியோடிகள் இருவர் திமிங்கிலங்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலுள்ள மோறோ பே எனும் கடற்கரைப் பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
கரையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் சுழியோடிகள் இருவரும் நீந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது மூச்சு விடுவதற்காக கடலின் மேற்பகுதிக்கு வந்த 2 திமிங்கிலங்கள் தமது இராட்சத வாயை திறந்தன.
எனினும் சுழியோடிகள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சற்று அருகில் இந்நிகழ்வு நடந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர்.
இதேவேளை அதிர்ச்சியடைந்த இருவரும் தப்பினோம் பிழைத்தோம் என அருகில் இருந்த படகில் சென்று ஏறிக்கொண்டனர்.
Average Rating