இங்கிலாந்தில் உருவாக்கப்படும் பூங்காப் பாலம்..!!
இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கு குறுக்காக பாதசாரிகளுக்கென பூங்காவுடன் கூடிய தொங்கும் பாலமொன்று உருவாக்கப்படவுள்ளது.
2012 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப வைபத்தின்போது அனைவரையும் கவரும் வகையில் இரும்பிலான பெரிய தீச்சட்டியை உருவாக்கிய தோமஸ் ஹீதர்விக் என்பரே இத்திட்டத்தினை உருவாக்கியுள்ளார்.
இங்கிலாந்தின் 2 ஆவது மிகப் பெரிய நதியான தேம்ஸ் நதியின் குறுக்கே வடக்கு மற்றும் தென் இங்கிலாந்தை இணைக்கும் இப்பூங்கா தொங்கு பாலம் 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்டில் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கு செலவுசெய்யப்படவுள்ள பணத்தினை ஹீதர்விக்கினால் தனியாட்களிடமிருந்து திரட்டம
டிந்தால் மக்களின் பணம் இதில் பயன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அருப் எனப்படும் பொறியியலாளர்கள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள இப்பாலத்தை 2016ஆம் ஆண்டில் திறந்து வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பhலத்துடன் சேர்ந்து துவிச்சக்கரவண்டி செலுத்தும் பாதையும் உருவாக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
லண்டனில் அழகை ரசிக்குமிடமாக அமையவுள்ள இப்பாலத்தில் மரங்கள் மற்றும் பூமரங்கள் என மிக அழகாகவும் அமைதியான ரசிக்கும் இடமாகவும் உருவாக்கப்படவுள்ளதாம்.
இந்த பூங்கா தொங்கு பாலத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ள நடிகை ஜோனா லும்லி கூறுகையில், இப்பாலம் லண்டன் வாசிகளுக்கும் இங்கு வருபவர்களுக்கும் அமைதியையும் அழகையும் தரும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Average Rating