தனுஷின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்..!!
பொலிவூட்டின் முன்னணி நாயகனான அபிஷேக் பச்சன் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கொலைவெறி பாடல் வெற்றிக்கு பின்னர் உலகளவில் தனுஷ் பிரபலமானார். இதனால் பொலிவூட்டில் ராஞ்ஹனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அப்படமும் மிகப்பெரும் வெற்றியும் பெற்றது.
இந்நி;லையில், தனுஷின் நடிப்புத் திறமையை புகழ்ந்து பேசிய அபிஷேக் பச்சன் கூறுகையில், தனுஷ் சம்மதித்தால் அவரது இயக்கத்தில் நடிக்கத் நான் தயாராக இருக்கிறேன்.
தனுஷின் முதல் படத்திலிருந்து சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்துவிட்டேன். அபாரமான நடிப்புத் திறமை கொண்ட தனுஷ், இளைஞர்களை எப்படி கவர்வது என்ற யுக்தியையும் அறிந்துவைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகராக அறிமுகமாகி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டும் தனுஷ், கடந்த சில வருடங்களாகவே இயக்குனராக மாற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். எனவே தனுஷின் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்தாலும் ஆச்சரியமில்லை
Average Rating