பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக… சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை..!!
அமெரிக்காவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ. காதலர்களான அவர்களுக்கு லோகன் ஸ்டீவன்சன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
லோகனுக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. அதற்காக அவனுக்கு பல்வேறு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் லோகனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இன்னும் சில வாரங்கள் தான் உயிரோடு இருக்கும் என்று தெரிவித்துவிட்டனர்.
முன்னதாக ஷானும், கிறிஸ்டீனும் வரும் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் லோகன் இறக்கும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் குழந்தை உயிருடன் இருக்கையிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் பிட்ஸ்பர்க்கில் திருமணம் செய்து கொண்டனர்.2 வயது லோகன் தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான்.
Average Rating